“1. இரட்சிப்புக்கின்றியமையாத சகல விதமான அறிவையும், விசுவாசத்தையும், கீழ்ப்படிவையும் அளிக்கக்கூடிய தவறிழைக்காத நியதியாகவும் (கட்டளை விதி), உறுதியானதும், போதுமானதாகவும் பரிசுத்த வேதாகமம் மட்டும் அமைந்துள்ளது. உள்ளுணர்வும், படைப்பின் கிரியைகளும் (பொது வெளிப்பாடு), மனிதன் எந்தவிதமான போக்கும் சொல்ல இடமளியாதபடி, தேவனுடைய ஞானம், வல்லமை, நற்குணம் ஆகியவற்றைத் தெளிவாக வெளிப்படுத்தினாலும், இரட்சிப்புக்கு இன்றியமையாத கடவுளைப்பற்றிய அறிவையும் அவரது சித்தத்தையும் வெளிப்படுத்த வல்லமையற்றவை. ஆகவே கடவுள் தமது திருச்சபைக்கு வெவ்வேறு காலங்களில் பல்வேறுவிதத்தில் தம்மையும் தம் சித்தத்தையும் வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாது, சத்தியத்தின் பாதுகாப்பிற்காகவும், பரப்புதலுக்காகவும், தீய மனிதர்கள், பிசாசு, உலகம் ஆகியவற்றின் தொல்லைகளின் மூலம் திருச்சபை பாதிப்புறாதபடி நிலை நிறுத்தப்பட்டு ஆறுதல் பெறவும், தம் சித்தத்தைக் குறித்தும் தம்மைக் குறித்துமான வெளிப்பாட்டை எழுத்துவடிவில் அருளவும் திருவுளங் கொண்டார்.”
(1689 திருமறைக் கோட்பாட்டின் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிய முதல் அதிகாரத்தின் முதலாவது பகுதி.)