ஒரு மனிதன் தன்னைத் தானே புகழ்ந்து

ஒரு மனிதன் தன்னைத் தானே புகழ்ந்து, “பாருங்கள், நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். அருமையான அனுபவத்தை என் வாழ்க்கையில் பெற்றிருக்கிறேன். என்னில் காணப்படும் கிறிஸ்தவ குணாதிசயங்களைப் பாருங்கள். என் பேச்சுக்கு நீங்கள் கீழ்ப்படி வீர்களானால் நீங்களும் நான் அடைந்த அனுபவத்தை அடையலாம்” என்று சொல்லுவதல்ல கிறிஸ்தவ சுவிசேஷம். நம்மில் காணப்படும் கிறிஸ்தவ குணாதிசயங்களைப் பார்ப்பதன் மூலம் எவரும் இரட்சிப்பை அடைய முடியாது. நாம் அடைந்திருக்கின்ற அனுபவங்களைப் பார்த்து எவரும் இரட்சிப்பைப் பெற முடியாது . . . ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அவர்களுக்கு நாம் பிரசங்கிக்க வேண்டும்; கிறிஸ்துவை விளக்கும் சுவிசேஷத்தைக் கேட்பதன் மூலம் மட்டுமே எவரும் இரட்சிப்பை அடைய முடியும். நீங்கள் குணமடைய விரும்பினால், ஏனைய ஆத்துமாக்கள் குணமடைய அவர்களுக்கு நீங்கள் துணை செய்ய விரும்பினால் உங்களுக்குள்ளேயே பார்த்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிடுங்கள். உங்களுடைய பாவத்தையும், அனுபவங்களையும் பார்த்துப் பாராட்டிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு சுவிசேஷத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்.

– கிரேச்சம் மேச்சன் (Grasham Machen)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s