நீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – ஜே. சீ. ரைல் –

இவை எவ்வாறு ஒன்றோடொன்று பொருந்திப் போகின்றன?

  1. இரண்டுமே கர்த்தரின் இலவச கிருபையின் காரணமாக விசுவாசிகளை வந்தடைகின்றன.
  2. இவை இரண்டுமே கிறிஸ்துவின் கிரியைகளினால் நிறைவேறியவை. அதன் மூலம் நீதிமானாக்கும் பாவமன்னிப்பும், பரிசுத்தப்படுத்தும் பரிசுத்தமும் கிடைக்கின்றன.
  3. இவை இரண்டுமே ஒரு விசுவாசியில் காணப்படுகின்றன; நீதிமானாக்கப்படுகின்றவன் எப்போதும் பரிசுத்தமாக்கப்படுகிறான், பரிசுத்தமாக்கப்படுகிறவன் எப்போதும் நீதிமானாகக் காணப்படுகிறான்.
  4. இவை இரண்டும் ஒரே நேரத்தில் ஆரம்பமாகின்றன. எந்த வேளையில் ஒருவன் நீதிமானாக்குதலுக்கு உள்ளாகிறானோ அதேவேளை அவன் பரிசுத்தமாகுதலுக்கும் உள்ளாகிறான்.
  5. இவை இரண்டுமே இரட்சிப்புக்கு அவசியமானவை. பாவமன்னிப்பைப் பெற்று, பரிசுத்தத்தையும் தன்னில் கொண்டிராமல் எவரும் பரலோகத்தை அடைய முடியாது.

இவை எவ்வாறு வேறுபடுகின்றன?

  1. கிறிஸ்துவுக்காக ஒருவரை நீதியானவராகக் கருதுவதே நீதிமானாக்குதல். இது விசுவாசிக்காக செய்யப்படுவது. ஆனால், பரிசுத்தமாக்குதலோ ஒருவர் தனக்குள் நீதியுள்ளவராக இருக்கும்படி பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் செய்கின்ற கிரியை. இது விசுவாசியில் செய்யப்படுகிறது.
  2. நீதிமானாக்குதல் மூலம் விசுவாசிகள் பெற்றிருக்கும் நீதி கிறிஸ்துவுடையதே தவிர அவர்களுடையதல்ல. ஆனால், பரிசுத்தமாகுதலின் மூலம் கிடைக்கும் நீதி விசுவாசிகளினுடையது.
  3. நீதிமானாக்குதலைப் பொறுத்தவரையில் நாம் செய்கின்ற மதக் கிரியைகளினால் எந்தப் பயனுமில்லை. கிறிஸ்துவில் வைக்கின்ற விசுவாசம் மட்டுமே அவசியமாயிருக்கின்றது. ஆனால், பரிசுத்தமாகுதலில் நாம் கிரியை செய்கிறோம்; நாம் போராடுகிறோம், நாம் ஜாக்கிரதையாயிருக்கிறோம், நாம் ஜெபிக்கிறோம், நாம் உழைக்கிறோம்!
  4. நீதிமானாக்குதல் முடிந்து நிறைவேறியதாக இருக்கிறது. ஆனால், நாம் பரலோகம் அடையும்வரை பரிசுத்தமாகுதல் நிறைவடையாது.
  5. நீதிமானாக்குதல் வளரவோ, அதிகரிக்கவோ செய்யாது. ஒருவன் முதல் தடவையாக விசுவாசித்த நேரத்தில் அடைந்த நீதிமானாக்குதலே எப்போதும் தொடர்ந்து அதேபோல் இருக்கும். ஆனால், பரிசுத்தமாகுதல் நம்முடைய ஆவியில் ஏற்படும் அசைவாகும்; அது வளர்ந்து இவ்வுலக வாழ்நாள் முழுவதும் அதிகரிக்கும்.
  6. கர்த்தருக்கு முன்பாக அவரால் நாம் எவ்வாறு கணிக்கப்படுகிறோம் என்பதைக் குறித்தது நீதிமானாக்குதல். பரிசுத்தமாகுதலோ நம்முடைய ஆவி இருக்கும் தன்மையைக் குறித்தது.
  7. பரலோகத்தை அடைவதற்கான அதிகாரத்தை நமக்குத் தருகிறது நீதிமானாக்குதல்; பரலோக வாழ்க்கையை அனுபவிக்க நம்மைத் தயாராக்குகிறது பரிசுத்தமாகுதல்.
  8. நமக்கு வெளியில் இருந்து நமக்காக கர்த்தர் செய்வது நீதிமானாக்குதல்; மற்றவர்களுடைய கண்களுக்கு அது புலனாகாது. கர்த்தர் நமக்குள் செய்வது பரிசுத்தமாகுதல்; நம்மைச் சுற்றி இருப்பவர்களால் அதைக் கண்டுகொள்ள முடியும்.

இந்த வேறுபாடுகளை வாசகர்கள் புரிந்துகொள்வது நல்லது. இந்த இரண்டு பதங்களையும் குறித்து குழப்பமடையாமலும், அவற்றின் வேறுபட்ட தன்மைகளை மறந்துவிடாமலும் இருங்கள். இவை இரண்டும் வெவ்வேறானவை; இருந்தபோதும் இவற்றில் ஒன்றைக் கொண்டிருப்பவர் மற்றதையும் கொண்டிருப்பார்.

[இது ஜே. சீ. ரைலின் ‘பரிசுத்தத்தன்மை’ என்ற மூல நூலின் சுருக்கவெளியீடான ‘பரிசுத்தத்தன்மையின் அம்சங்கள்’ என்ற கிருபை வெளியீடுகளின் (Grace Publications, UK) ஆங்கில நூலில் உள்ள இரண்டாம் அதிகாரத்தின் ஒரு பகுதியின் தமிழாக்கம். இந்தத் தமிழாக்கத்தை ஆசிரியரே செய்திருக்கிறார்.]

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s