கோவிட்-19

ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்கிரதை! – கோவிட்-19

இது கோவிட்-19ன் காலம்! படுக்கப்போகும் நேரத்தில் இருந்து காலையில் கண்விழிக்கும்வரை அதுதானே நினைவில் இருக்கிறது. அடுத்து என்ன நடந்திருக்கிறது என்று நானும் பாக்ஸ் நியூசில் (Fox news) இருந்து எல்லா ஆங்கிலச் செய்திகளையும் ஒரு நாளில் இரண்டு தடவைகளாவது பார்த்துவிடுகிறேன். எப்படிப் பார்க்காமல் இருக்கமுடியும்? ஒவ்வொரு நாளும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொகை அதிகரித்து வருவது மட்டுமல்லாமல் இறந்துகொண்டிருப்பவர்களின் தொகையும் அதிகரித்து வருகிறதே. அதுவுமில்லாமல் ஒவ்வொரு நாளும் தேசங்களின் அரசாங்கங்கள் புதிது புதிதாக நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கும்படியான, அதே நேரம் அவசியமான அநேக நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன; அதையெல்லாம் நாட்டு மக்களின் நன்மையைக் கருதியே செய்துவருகிறார்கள். வைரஸால் மேலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்றே அவர்கள் கருத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]


கொரோனாவும் வீட்டுச்சிறைவாசமும்!

கொரோனா வைரஸ் வெகுவேகமாக உலகெங்கும் பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் உயிர்ச்சேதம் அதிகம். இந்த நாடுகள் எப்போதோ முழு தேசத்தையும் ஆள்நடமாட்டமில்லாதவகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கின்றன. ஒவ்வொன்றாக நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து நாட்டு மக்களை ஆறு மாதங்களோ (ஆஸ்திரேலியா) சில வாரங்களுக்கோ (பிரிட்டன், இந்தியா, ஸ்ரீ லங்கா), அல்லது ஒரு மாதமோ (நியூசீலாந்து) வீடுகளிலேயே இருக்கும்படி அறிவித்து வருகிறார்கள். மலேசியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் மிலிட்டரி மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள். அமெரிக்காவின் சில முக்கிய மாநிலங்களிலும் இதேநிலைதான். கொரோனா வைரஸுக்கு எந்த மருந்தும் இல்லாததால் அது பரவுவதைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கைகள் எல்லாம். வெறுமனே வீட்டில் இருங்கள் என்று சொன்னால் மக்கள் அதைச் செய்வதில் அக்கறை காட்டமாட்டார்கள் என்பதாலேயே போர்க்கால அதிரடி நடவடிக்கைகளை அரசுகள் எடுக்கவேண்டியிருக்கிறது. மேலை நாட்டானாக இருந்தாலும், கீழைத்தேசத்து மனிதனாக இருந்தாலும் மனிதன் மனிதன்தானே! இன்றைக்குச் செய்தியில் வாசித்தேன், நாளை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்பதால் என் நகரத்தில் துப்பாக்கி விற்கும் கடையொன்றில் பெரிய கியூ நின்றதாம். மக்களின் நலன் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மனிதன் ஏன் துப்பாக்கி வாங்குவதில் ஆவல் காட்டுகிறான்? கடைக்காரனே இதுபற்றி கவலை கொண்டு போலீஸுக்குப் போன் செய்திருக்கிறானாம். தன் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து வருகிறது என்கிறபோது மானிடனின் மூளை எந்தவிதத்திலெல்லாம் வேலை செய்கிறது! மனிதன் உணர்வில்லாதவனாய் இருக்கிறான் என்று வேதம் சும்மாவா சொல்லுகிறது. [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

One thought on “கோவிட்-19

  1. COVID-19 and home quarantine was soul searching to me. I have started reading a couple of books. And one such book is Bible as Literature to get elements of literature to improve my basic understanding toward reading text. Thank you, Pr.
    Arul

    Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s