பணத்தாலும் பொருளாலும்
தன்னதிகார பெலத்தாலும்
மாபெரும் வீரனென்ற
மக்கள் பாராட்டாலும்
எளிதாய்த் தன் நோய்க்கு
எலிசாவிடம் தீர்வுபெற
எண்ணினான் நாகமான்
தாழ்மையை வெறுத்தான்
கிருபையை நிராகரித்தான்
இரட்சிப்பை நிந்தித்தான்
இலவசமாய் வருவதெல்லாம்
தன் தகுதிக்கு ஆகாதென
தட்டியெறிந்தான் நாகமான்
வராது தீர்வு உடல்நோய்க்கு
கிடைக்காது மருந்து இதயவியாதிக்கு
கிருபையை நீ ஏற்கமறுத்தாலென்று
செவ்வினர் சேவகர் அவனிடம்
புத்தியான அவர்கள் பேச்சால்
புத்தி தெளிந்தது நாகமானுக்கு
தாழ்த்தியது கிருபை சீரியனை
நீக்கியது ஆவி தொழுநோயை
இறுமாப்போடு இஸ்ரவேல் வந்து
இளக்காரமாய்ப் பேசியவன்
இஸ்ரவேலின் தேவனைவிட
இல்லைவேறு தேவனுலகில் என்றான்