உன் பீரோவை அலங்கரிக்க
நான் பிறக்கவில்லை.
நீ அடிக்கடி தொட்டும் தடவியும்,
பார்த்தும் இரசிக்கவும்,
நான் உருவாகவில்லை.
என்னை உண்டாக்கியவன்
உழைத்த உழைப்பிற்கு
ஈடு இணை இல்லை.
இரவு பகலாய் வியர்வை சிந்தி
சீராய்ச் சிந்தித்து
வார்த்தைகளைக் கோர்த்து
அழகுபடப் படைத்து
நல்லாடை போர்த்து என்மேல்
நீ பெற்றுப் படித்துப் பயன்பெற
என் ஆசான் என்னை வார்த்தார்.
வாங்கிய நாள் முதல் என்னை நீ
தொட்டுத் தடவிப் பார்த்ததைத்
தவிர என்ன செய்தாய்?
முகநூலில் என் படத்தைப்போட்டு
உன் நண்பர்களிடம் வாசகன் நீ,
நேசிக்கிறாய் என்னை, என்று
காட்டி மகிழவா
பிறந்தேன் நான்?
– சுபி