நெல்லை கண்ட அப்போஸ்தலன்

[19ம் நூற்றாண்டுத் தமிழகத்தின் பியூரிட்டன் அருட்பணியாளரான ரேனியஸின் வாழ்க்கை வரலாறும், பணிகளும்]

ரேனியஸ்

தற்காலத்தில் தமிழில் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட நூல்கள் எப்பொழுதுமே இரசித்து வாசிக்கும்படியாக இருப்பதில்லை என்பது நம் வாசகர்களில் அநேகர் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கும் உண்மை. இதற்கான காரணங்களைப் பல தடவைகள் இந்த இதழில் வெவ்வேறு ஆக்கங்களில் விளக்கியிருக்கிறேன். அந்நிலை மாறுவதென்பது சுலபமானதல்ல; இன்று அல்லது நாளை நடந்துவிடக்கூடியதுமல்ல. இருந்தும் வாசித்தனுபவிக்கக்கூடிய ஒரு சில நல்ல நூல்களும் இருக்கத்தான் செய்கின்றன. சில வருடங்களுக்கு முன் என்னுடைய தமிழகப் பயணத்தின்போது, சென்னை தியாயராஜர் நகர் நியூலன்ட்ஸ் புத்தகநிலையத்தில் பல நூல்களை வாங்கினேன். இந்தப் புத்தகநிலையம் வித்தியாசமானதாகத்தான் இருந்தது. பல முக்கிய புத்தக நிலையங்களில் வாங்குவதற்கு அரிதாகக் காணப்படும் நூல்களை இங்கு காணமுடிந்தது. அத்தோடு இந்தப் புத்தக நிலையம் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு விற்பனை நிலையம். அதன் உரிமையாளர் எந்த நூலையும் வாசித்துப் பார்க்காமல் கடையில் விற்பனைக்கு வைப்பதில்லை. அதை அவரிடம் பேசியதில் இருந்து அறிந்துகொண்டேன். பணத்துக்காக மட்டும் நூல்களை விற்கும் அநேக கடைகளைவிட இது வித்தியாசமானது என்பது இதிலிருந்தே தெரிகிறது; ஒரு நல்ல வாசகனுக்கு இதை உணர்வது கஷ்டமல்ல.

Continue reading