அன்புள்ள வாசகர்களுக்கு,
கிறிஸ்துவின் நாமத்தில் என் நல்வாழ்த்துக்கள். இதைப் படிக்கின்றபோது, சஞ்சிகையோடு சஞ்சிகையாக இன்னொரு சஞ்சிகையா என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். எத்தனையோ சஞ்சிகைகள் இருக்கின்ற நேரத்தில் ஏன் இன்னொன்று என்ற வினாவிற்கு நான் நிச்சயம் பதிலளித்தேயாக வேண்டும். வெறுமனே, ஏற்கனவே இருக்கின்ற கூட்டத்தோடு கூட்டமாக நாமும் சேர வேண்டுமென்ற நோக்கத்துடன் அல்லாமல், கிறிஸ்தவ இலக்கிய வளர்ச்சியையும், தெளிவான வேத விளக்கங்களைப் பெற்று, கர்த்தருடைய பிள்ளைகள், அவருடைய கிருபையிலும், அறிவிலும் வளரவேண்டுமென்ற நோக்கத்தையும் மனதில் கொண்டே இந்தச் சிறு சஞ்சிகை தொடங்குகிறது.