இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களைக் குழப்பிக்கொண்டிருக்கும் ‘கெரிஸ்மெட்டிக்’ இயக்கத்தின் தோற்றத்தையும், போதனைகளையும், திருமறையின் அடிப்படையில் ஆராயும் இக்கட்டுரை, அதன்பிடியில் அகப்பட்டுத் தத்தளிப்பவர்களுக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறோம். – ஆசிரியர்
1995 இதழ் 2
‘கிருபையின் போதனைகள்’ என்றால் என்ன?
‘கிருபையின் போதனைகள்’ என்ற சொற்றொடர் பலருக்குப் புதிதாக இருக்கலாம். சிலர் அது குறித்துக் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு சிலர் அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தும், அதில் தெரிவில்லாது இருக்கலாம். இக்கட்டுரை இப்போதனைகளை சரித்திர பூர்வமாக ஆராய்ந்து அறிமுகப்படுத்துகிறது.
புத்தக விமர்சனம்
கிறிஸ்தவன் யார்?
கார்டினர் ஸ்பிரிங், D.D.
தமிழ் பாப்திஸ்து வெளியீடு, கீழ்ப்பாக்கம்,
சென்னை 600 010. 83 பக்கங்கள்.
இப்புத்தகம் கார்டினர் ஸ்பிரிங் (Gardiner Spring) என்பவர் எழுதிய ‘TheDistinguishing Traits ofChristian Character’ என்ற நூலின் தமிழாக்கம், கார்டினர் ஸ்பிரிங், அமெரிக்காவில், நியூயோர்க் நகரில் ஐம்பத்து ஐந்து வருடங்கள் போதராக பணிபுரிந்து வந்தவர். இந்நூலை இவர் ஜொனத்தன் எட்வர்ட்ஸின் (Jonathan Edwards) ‘The Religious Affections’ என்ற புத்தகத்தைத் தழுவி எழுதியுள்ளார். எட்வர்ட்ஸின் அழியாப் புகழ் பெற்ற எழுத்துக்களின் சாரத்தை ஒவ்வொரு கிறிஸ்தவனும் வாசித்துப் பயனடையக்கூடிய முறையில் ஸ்பிரிங் தனது சொந்த நடையில் தந்துள்ளார் (இவ்விரு புத்தகங்களும் ஆங்கிலத்தில் தொடர்ந்தும் பதிப்பிலிருக்கின்றன). தமிழ் பாப்திஸ்து வெளியீடு அதனைத் தமிழ்க்கிறிஸ்தவர்களும் பயனடையும் விதத்தில் தமிழில் வெளியிட்டுள்ளது.
கேள்வி? – பதில்!
இச்சஞ்சிகை ஆசிரியரிடம் பொதுவாகக் கூட்டங்களில் பலர் கேட்ட முக்கியமான கேள்விகளையும் பதிலையும் ஏனையோரது பயன்கருதி இப்பகுதியில் வெளியிடுகிறோம்.
திராவிட சமயங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? கிறிஸ்தவமும் சைவமும் ஒன்றுதான் என்ற முறையில் சிலர் போதித்து வருகிறார்களே, திருமறையில் இதற்கு என்ன ஆதாரம் உண்டு?
ஆசிரியர் மடல்
கண்கள் திறக்க. . .!
அன்புள்ள வாசகர்களுக்கு,
கிறிஸ்துவின் நாமத்தில் என் நல்வாழ்த்துக்கள். கர்த்தருடைய கிருபையின் உதவியால் நாம் ஆரம்பித்துள்ள இச்சிறிய முயற்சிக்குக் கிடைத்து வரும் ஆதரவிற்குத் தலை வணங்குகிறோம். உங்களுடைய அன்பான ஆதரவும், கருத்துக்களும் இவ்வூழியத்திற்குப் பேருதவியாக அமையும், பலவிதமான சபை ஊழியங்களுக்கு மத்தியில் இப்பத்திரிகைக்கும் நேரம் ஒதுக்க அனுமதித்து, ஆதரவளித்து ஜெபத்தோடு என்னை ஊக்குவித்து வரும் என் சபை மக்களுக்கு என் நன்றி என்றும் உரித்தாகும். அவர்களுடைய உதவியில்லாமல் இதை நான் ஆரம்பித்திருக்கவே முடியாது. முதலாவது இதழுக்குக் கிடைத்துள்ள ஆதரவு எமக்கு அதிக ஊக்கத்தை அளிக்கிறது. சந்தா எதுவும் இல்லாமல், பலரும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை வெளியிடுகிறோம். ஆகவே, இதைப் பெறும் வாசகர்கள் மற்றவர்களுக்கு இதனை அறிமுகப்படுத்தி இவ்வூழியத்தில் பங்கு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.