வளரும் மலர் . . . !

அன்புள்ள வாசகர்களே,

புது வருடம் பிறந்து மூன்று மாதங்கள் பறந்தோடி விட்டன, இப்பத்திரிகை பிறப்பதற்கு முன்பாக நாட்கள் இவ்வளவு வேகமாக நகர்ந்ததை நான் உணர்ந்ததில்லை. நகரும் நாட்களுடன் வேகமாகப் பொறுப்புகளும் அதிகரிக்கின்றன. கடந்த இதழுடன் பத்திரிகை ஆயிரம் பிரதிகளைத் தாண்டி நிற்கிறது. மேலும் பிரதிகள் கேட்டு எழுதுவோர் அநேகர். முடிந்த வரை எழுதுவோரின் தேவையை நிறைவு செய்ய நாம் முயற்சிக்கிறோம். தேவனுக்குப் பிரியமானால் மேலும் அச்சிட அவர் வகை செய்வார் என்பது எம் நம்பிக்கை. இத்தேவைகளுக்காகவும் கர்த்தரிடம் ஜெபத்தில் வாருங்கள். பத்திரிகையின் தேவைகளைப் பலவிதங்களில் தொடர்ந்து சந்திக்கும் அன்புள்ளங்களையும் ஜெபத்தில் நினைவு கூறுங்கள்.

Continue reading