கர்த்தர் கட்டியெழுப்பும் திருச்சபை

திருச்சபை அமைய வேண்டிய முறை பற்றிய முக்கிய அம்சங்களைத் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழ் திருச்சபைகள் கொண்டிருக்க வேண்டிய விசுவாச அறிக்கை பற்றி விளக்கியது. இவ்விதழில் இன்று சிலரால் பிரச்சனைக்குரியதாகக் கருதப்படும் ஒரு அம்சத்தை ஆராயவிருக்கிறோம். அதாவது திருச்சபையில் பெண்களின் பங்கு என்ன? அதுகுறித்து திருமறை என்ன கூறுகிறது என்பதை இவ்விதழில் பார்க்கப் போகிறோம். கடந்த வருடத்தில் இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் சமயக் கிளை பெண்கள் திருச்சபையில் போதகர்களாகப் பணி புரிய அனுமதியளித்தன. இதை எதிர்த்த நூற்றுக்கணக்கான சபைத்தலைவர்கள் அச்சமயக்கிளையை விட்டு விலகினார்கள். ஆனால் அவர்கள் போய்ச் சேர்ந்த இடமோ ரோமன் கத்தோலிக்க சபை. கலங்கிய குட்டையில் மீன்பிடிப்பது போல் ரோமன் கத்தோலிக்க சபை இச்சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. ஆங்கிலிக்கன் சபை இன்று எந்நிலைமையில் உள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய குழப்ப சூழ்நிலை ஆங்கிலிக்கன் சபையை மட்டுமல்லாது அனைத்து சமயக்கிளைகளையுமே (Mainline Churches) சூழ்ந்திருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

Continue reading