திருமறைத்தீபம் குழந்தைப் பருவத்தைக் கடந்து நான்காவது வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறாள். எப்படி வளர்வாளோ, இவளை வளர்த்தெடுக்க நம்மால் முடியுமோ என்றெல்லாம் ஐயம் கொண்டிருந்த எம்மை வியப்பில் ஆழ்த்தி நன்றாக வளர்ந்து வருகிறாள் தீபம்.
அவளுக்கு வண்ணச்சட்டை போட்டால் என்ன என்று கேட்டு பல வாசகர்கள் எழுதியிருந்தார்கள். அவர்களது உள்ளம் குளிர இவ்வருட முதல் பத்திரிகையின் அட்டையை வண்ணத்தில் வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.