ஆசிரியரிடமிருந்து . . .

இன்று தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்தவம் என்ற பெயரில் வேதத்தின் அதிகாரத்தை நிராகரித்து நடந்து வரும் கூத்துக்களைப் பலரும் வெறுக்கத்தான் செய்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்திற்குத் தங்களுடைய வாழ்க்கையில் கொடுக்க வேண்டிய இடத்தை அநேகர் கொடுக்க மறுப்பதுதான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். பத்துக்கட்டளைகளுக்கும் நமக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பது போல் வீட்டிலும், வெளியிலும், சபையிலும் அநேகர் நடந்துவரும் போக்கை நாம் பார்க்கிறோம். பத்துக் கட்டளைகளை நிராகரித்துவிட்டு பரிசுத்த வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது என்ற உண்மையே அநேகருக்கு உரைப்பதில்லை. இதற்கு சபைத்தலைவர்களும்கூட விதிவிலக்கல்ல.

Continue reading