திருமறைத்தீபம், இவ்விதழுடன் ஐந்தாவது ஆண்டை நிறைவு செய்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் தீபத்தின் மூலம் பல நாடுகளில் அநேக ஆத்துமாக்களைக் கர்த்தர் ஆசீர்வதித்துள்ளதை தொடர்ந்து வரும் கடிதங்களின் மூலம் அறிந்து கொள்கிறோம். கடிதமெழுதி தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, பத்திரிகைக்காக அன்றாடம் ஜெபிக்கிறோம் என்றும், தொடர்ந்து சத்தியத்தை மட்டும் எழுதுங்கள் என்று எம்மை ஊக்குவித்து வரும் நூற்றுக்கணக்கான அன்பு வாசகர்களுக்கு எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வருட ஆரம்பத்தில் பத்திரிகை செலவு அதிகரித்ததன் காரணமாக மேலைத்தேய நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு மட்டும் சந்தா அறிமுகப்படுத்த நேர்ந்தது. ஆனால், பத்திரிகையை எல்லோருக்கும் தொடர்ந்து அனுப்பிவந்துள்ளோம். கர்த்தர் இவ்வூழியம் தடையில்லாது தொடர வேண்டும் என்பதை எமக்கு உணர்த்தி, சந்தா இல்லாமலேயே பத்திரிகையைத் தொடர்ந்து இலவசமாக அனுப்பும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளார். ஆகவே, இனிப்பத் திரிகைக்கு சந்தா இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இருந்தபோதும், இப்பத்திரிகையின் மூலம் பயனடையும் அன்பர்கள் அனுப்பும் நன்கொடைகள், பலருக்கும் இதனை இலவசமாகத் தொடர்ந்து அனுப்பத் துணைபுரியும். ஆகவே, இவ்வூழியத்தில் பங்குகொள்ள ஆர்வமுள்ளவர்கள் உங்கள் நன்கொடைகளை பத்திரிகையின் முகவரிக்கு அனுப்புங்கள்.