தவிர்க்க முடியாத காரணங்களால் இவ்வருடத்தில் ஜுலை-செப்டம்பர் இதழைத் தனியாக வெளியிட முடியவில்லை. அநேகர் ஏன் இன்னும் பத்திரிகை வரவில்லை? என்று கேட்டு எழுதியிருந்தார்கள். ஆர்வத்தோடு பத்திரிகைக்காக காத்திருக்கும் உங்களைக் காக்க வைத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். போதக ஊழியத்தோடு எழுத்து வேலையும் செய்வதென்பது இலகுவான ஒரு காரியமல்ல என்றாலும் இந்நாள்வரைத் தேவன் எம்மைக் கைவிடாமல் ஒவ்வொரு இதழையும் வெளியிட அனுமதித்தார். ஆனால் வருடம் முடியுமுன் ஓரிதழாவது உங்களை வந்தடையட்டும் என்பதற்காக இம்முறை இரு இதழ்களையும் ஒன்றினைத்து மேலதிக பக்கங்களோடு வெளியிட்டுள்ளோம். அடுத்த வருடத்தில் எல்லா இதழ்களையும் தவறாது வெளியிட தேவன் எம்மை அனுமதிக்க எம்மோடு சேர்ந்து ஜெபியுங்கள்.
பத்திரிகை அடுத்த வருடத்தில் தனது ஆறாவது வயதை எட்டுகிறது. கடந்த ஐந்து வருடத்தில் வெளிவந்துள்ள இதழ்களை (1995-1999) நல்ல முறையில் அழகாகத் தொகுத்து குறைந்தளவு பதிப்பாக (Limited Edition) ஹார்ட்கவரில் வெளியிட்டுள்ளோம். இவற்றை இறையியல் கல்லூரிகளுக்கு மட்டும் இலவசமாக அனுப்பி வைக்கத் தீர்மானித்துள்ளோம்.