இன்று பிரசங்கத்திற்கு சபைகளில் அதிக இடம் கொடுக்கப்படுவதில்லை. அதாவது, வேதபூர்வமான பிரசங்கத்திற்கு இடம் கொடுக்கப்படுவதில்லை என்றே சொல்ல வருகிறேன். போதகர்கள் பாடுவதற்கு எடுக்கும் பயிற்சியையும் முயற்சியையும் பிரசங்கம் தயாரிப்பதற்கு கொடுப்பதில்லை. இது இன்றைய தமிழ் சபைகளைப் பிடித்துள்ள ஒரு பெருவியாதி. கெரிஸ்மெட்டிக் சபைகளிலோ பேய் விரட்டுவதும், நோய் தீர்ப்பதுமே பலருக்கு வேலையாய்ப் போய்விட்டது. நமது மக்களுக்கு வேதம் என்றால் என்ன என்று புரியாமல் இருப்பதற்கும், கர்த்தருடைய வழிகளைவிட பிசாசின் தந்திரங்கள் அவர்களையும் சபைகளையும் ஆட்டிப்படைப்பதற்கும் இதுவே காரணம்.