அன்புக்குரிய வாசகர்களே! ஏழு வருடங்களுக்குப் பிறகு பத்திரிகையின் அமைப்பை நாம் மாற்றி அமைத்திருக்கிறோம். பத்திரிகையை சுலபமாகக் கையில் கொண்டு போவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவும், பத்திரிகை போகும் வழியில் உருமாற்றமடையாமல் எல்லா நாடுகளையும் போய்ச்சேர வேண்டுமென்பதற்காகவும் இந்தமாற்றத்தைச் செய்திருக்கிறோம். இப்புதிய வடிவம் பலவிதங்களில் உங்களுக்கு வசதியாக இருக்கும் என்று நம்புகிறோம். பத்திரிகையின் உருவத்தில்தான் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர அதன் உள்ளடக்கங்களிலும், சத்தியத்திலும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து சீர்திருத்த போதனைகளை கர்த்தரின் மகிமைக்காக திருமறைத்தீபம் பலரும் அறிய வெளிப்படுத்தி வரும்.