தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு கடந்த வருடத் அக்டோபர் மாதத்தில் மதமாற்றத்தடைச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது எவரும் எதிர்பார்க்காத ஒன்றாகும். இந்தியாவிலேயே சமுதாய சீர்திருத்தங்களில் முன்னணி இடத்தை வகித்தது தமிழ்நாடு. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கொள்கைகள் தீப்பொறிகளாக சுடர்விட்டுத் தெரித்ததும் தமிழ்நாட்டில்தான். கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளை சாடிய பெரியாரை வளர்த்ததும் தமிழ் நாடுதான். இத்தனை சீர்திருத்தங்களுக்கும் பெயர்போன மாநிலம் மத ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கும் மதமாற்றத்தடைச்சட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பா. ஜ. கா ஆட்சி செய்யும் பகுதிகளில் இச்சட்டத் கொண்டுவரப்பட்டிருந்தால் அதில் ஆச்சரியம் இருந்திருக்காது. இந்துத்துவாக்களுக்கு சோறுட்டி வளர்க்கும் கட்சி அது. இன்று திராவிட கட்சிகளில் ஒன்று இந்துத்துவக்கோட்பாட்டைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளது. இது இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல.

Continue reading