இந்த இதழோடு திருமறைத்தீபம் முதல் முறையாக ஸ்ரீலங்கா வாசகர்களுக்காக மட்டும் ஸ்ரீலங்காவில் அச்சிடப்பட்டு அனுப்பப்படும். ஸ்ரீலங்கா வாசகர்கள் திருமறைத்தீபத்தை கொழும்பு நகரில் இருக்கும் கிருபை இலக்கிய நிர்வாகிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பத்திரிகையை விநியோகிக்க ஆவலுடன் முன்வந்துள்ள கிருபை இலக்கிய நிர்வாகத்தை சேர்ந்தவர்களுக்க எமது நன்றி! இவர்களுடைய ஊழியத்தின் மூலம் பத்திரிகை மேலும் பலரைச் சென்றடைந்து, ஸ்ரீலங்கா தேசத்தில் சீர்திருத்த சத்தியங்களைப் பலரும் அறிந்து கொள்வதன் மூலம் கர்த்தருக்கு மகிமை சேர ஜெபிப்போம்.