ஊழியத்தைக் குடும்பச் சொத்து போல் பயன்படுத்தும் முறையை தமிழ்கூறும் நல்லுலகில் காணப்படும் கிறிஸ்தவ ஊழியங்களில் பரவலாகக் காணலாம். குலத்தொழில் முறை இருந்து வருகின்ற நமது இனத்தில் கிறிஸ்தவ ஊழியங்களிலும் இந்த முறை பின்பற்றப்பட்டு வருவரு எந்தளவுக்கு உலகப்பிரகாரமான சிந்தனைகளும், எண்ணங்களும் கிறிஸ்தவத்தைப் பாதித்து, சபைகளையும், ஆத்துமாக்களையும் இருட்டில் வைத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கிறிஸ்தவ ஊழியங்களில் குடும்பச்சொத்துபோல் இருந்துவரும் இந்தக் குலத்தொழில் முறையின் ஆபத்தை அலசுகிறது இந்த இதழின் முதலாவது ஆக்கம்.