உப்புச்சப்பில்லாத தியானச் செய்திகள்

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் காணப்படும் கிறிஸ்தவம் வேதபூர்வ மான இறையியல் பஞ்சத்தால் வாடிவருவதை திருமறைத்தீபத்தின் மூலம் அடிக்கடி வாசகர்களுக்கு நினைவுறுத்தி வருகிறோம். பிரசங்கம் என்ற பெயரில் ஆவியும் அனலுமில்லாத சுருக்கமான பேச்சுக்களும், தனிமனித அனுபவங்களும், அரைவேட்காட்டு சாட்சிகளும் சபைகளை அலங்கரித்து ஆத்துமாக்களை ஆத்மீக பஞ்சத்தில் அலைய விட்டுக் கொண்டிருக்கின்றன. சத்தான, வேதபூர்வமான இறையியல் கோட்பாடுகளை அறிந்து கொள்ள முடியாத நிலையில் பெந்தகொஸ்தே/கெரிஸ்மெடிக் ஆக்கிரமிப்பில் இருண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள் நம்மக்கள். கருத்துள்ள, பொருளுள்ள கிறிஸ்தவ இலக்கியம் என்பது தமிழுலகம் பெருமளவில் அறியாததொன்றாக இன்றும் இருந்து வருகிறது. மொத்தத்தில் இந்தக் கணினி யுகத்தில் நாமே நம்மைப் பார்த்து வெட்கப் பட்டு நிற்க வேண்டிய நிலையில் தமிழ் கிறிஸ்தவம் இருந்து வருகிறது.

Continue reading