கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழில் கிறிஸ்தவ இலக்கியம் எந்தள வுக்கு வளர்ந்திருக்கிறது என்பதைக் கணிப்பதே இந்த ஆக்கத்தின் நோக்கம். கிறிஸ்தவ இலக்கியம் என்று கூறும்போது கிறிஸ்தவ இலக்கியமாகத் தன்னை இனங்காட்டிக் கொண்டு தமிழில் வெளி வரும் எல்லாக் குப்பைகளையும் நாம் கருத்தில் கொள்ளவில்லை.
கிறிஸ்தவ இலக்கியம்
‘கிறிஸ்தவ இலக்கியம்’ என்ற வார்த்தைகளின் பொருளை முதலில் விளக்குவது அவசியமாகிறது. இதில் ‘கிறிஸ்தவம்’ என்று நாம் குறிப்பிடுவது ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தவிர்த்த புரொட்டஸ்தாந்து பிரிவினரை மட்டுமே. ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவமல்ல. அது கிறிஸ்தவத்தின் பெயரில் உலாவரும் போலிச் சமயம். இது தமிழினத்தில் இன்று அநேகர் புரிந்து கொள்ளாத உண்மையாக இருக்கிறது. சமீபத்தில் போப் இரண்டாம் ஜோன் போலின் மரண சடங்கின்போது நியூசிலாந்தின் கத்தோலிக்க குரு ஒருவர் பின்வருமாறு கத்தோலிக்க மதத்தை புரொட்டஸ்தாந்து மதத்திலிருந்து பிரித்துக் காட்டினார்: “கத்தோலிக்க மதம் புரொட்டஸ்தாந்து மதத்தைப் போல வார்த்தையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது சடங்குகளை அடிப்படையாகக் கொண்டது. இதுவே இரண்டையும் பிரிக்கும் முக்கிய மான அடிப்படை வேறுபாடு” என்றார். இது எத்தனை பெரிய உண்மை. கத்தோலிக்க மதம் வேதத்தை ஒரு சாட்டுக்காக கையில் வைத்திருந்தாலும் அது வேதத்தின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்க வில்லை. சடங்குகளில் மட்டுமே அது மனிதனின் இரட்சிப்புக்காகவும், அத்தனை ஆத்மீகக் காரியங்களுக்காகவும் தங்கியிருக்கிறது.