அவதூறு சொல்லாதே!

சமீப காலமாக அவதூறு சொல்லுவதைக் (புறங்கூறுதல் அல்லது பழித்துரைத்தல்) குறித்து நான் அதிகம் சிந்திக்க நேர்ந்தது. அதற்கான காரணத்தை நான் இங்கே விளக்காமல் இருக்க முடியாது. கடந்த சில வருடங்களாக எனக்கு அறிமுகமான சில போதகர்களைக் குறித்து போதக ஊழியத்தில் இருப்பவர்களே அவதூறாக எழுதியும், பேசியும் வந்திருக்கிறார்கள். அதுபற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும், கிறிஸ்தவ நண்பர்களுக்கும் நான் பல தடவைகள் ஆலோசனை தர நேர்ந்தது. அத்தோடு வேறுசிலர் ‘நியூஸ் லெட்டர்‘ அனுப்புகிறோம் என்ற பெயரில் சபை சகோதரர்களைப் பற்றியும் ஏனைய போதகர்களைப் பற்றியும் அவதூறாக எழுதி சபைகளுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வருகிறார்கள். சில போதகர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் அல்லது தங்களோடு முரண்படுகிறவர்கள் சபையில் இருந்தால் அவர்களை அடக்குவதற்காக அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி (Private life) ஏறுக்குமாறாக அநியாயமான பழிகளை அவர்கள் மேல் சுமத்தி பகிரங்கப்படுத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வேறுசிலர் சபையில் தங்களுக்குப் பிடிக்காதவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டோ, குறிப்பிடாமலோ பிரசங்க மேடையில் இருந்து அடிக்கடி அவர்களைத் தாக்கிப் பேசி வருவதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சக சகோதரர்கள் மீது குற்றஞ்சாட்டி அவதூறான செய்திகளைப் பரப்பி வரும் செயல் கிறிஸ்தவர்கள் மத்தியில் வெகு சாதாரணமாகவே இன்று நடந்து வருகிறதை நான் காண்கிறேன். தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் இது ஒரு கலாச்சாரமாக உருவெடுத்திருப்பது என்னை அதிகம் சிந்திக்க வைத்தது. அதுமட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களுக்குப் பயன்படும்படியாக இது பற்றி விபரமாக எழுத வேண்டும் என்றும் நான் தீர்மானித்தேன்.

Continue reading