வாசகர்களே!

திருமறைத்தீபம் 20வது வருடத்தை இந்த இதழோடு ஆரம்பிக்கிறது. இம்மட்டுமாக கர்த்தர் பத்திரிகை மூலம் சத்தியத்தை சத்தியமாக விளக்கி வாசகர்களுக்கு அளிக்க துணைபுரிந்திருக்கிறார். இந்தப் பணி தொடர தொடர்ந்து ஜெபியுங்கள். சத்தியம் பலரின் கண்களைத் திறக்கட்டும். வேத வசனங்களில் தெளிவும், நம்பிக்கையும் இல்லாவிட்டால் கிறிஸ்தவம் கிறிஸ்தவமாக இருக்க முடியாது என்பதை நம்மினத்துக் கிறிஸ்தவம் உணர வேண்டும் என்ற ஆதங்கத்தோடுதான் இந்தப் பத்திரிகை ஆரம்பமானது. அது வீண்போகவில்லை என்பதை நாம் நிதர்சனமாக உணர்கிறோம். இன்னும் அநேகர் சத்தியத்தெளிவடைந்து வேதநம்பிக்கைகளை மட்டும் சுமந்து கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ பத்திரிகையைக் கர்த்தர் பயன்படுத்தட்டும்.

மனித சித்தத்தைப் பற்றிய தொடரில் இன்னொரு பகுதியை (நீயும் நானுமா – 2) இந்த இதழில் தந்திருக்கிறோம். அது நிறைவடைந்தபின் நூலாக வெளிவரும். இறையனுபவத்தை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதைத்தான் சுவிசேஷம் சொல்லுவதன் மூலம் எதிர்பார்க்கிறோம். அந்த அனுபவத்தை அடையவும் அதில் வளரவும் தெளிவான இறைபோதனைகள் அவசியம். இறைபோதனைகள் இல்லாமல் இறையனுபவத்தில் வளரவோ, உயரவோ முடியாது. அதை விளக்கும் ஆக்கமே ‘வண்டியும் சக்கரங்களும்’.

Continue reading