வாசகர்களே!

இந்த இதழின் எல்லா ஆக்கங்களையும் நானே எழுத கர்த்தர் துணை செய்தார். சில சமயங்களில் எப்படி இந்த இதழை முடிக்கப்போகிறோமோ என்ற ஏக்கம் எப்போதுமே எழும். இருந்தபோதும் குறிப்பிட்ட காலத்துக்குள் தரத்தில் எந்தவித குறைபாடும் இல்லாதபடி இதழ்களை நிறைவுசெய்ய கர்த்தர் துணை செய்திருக்கிறார்; தொடர்ந்தும் செய்கிறார். இந்த இதழ் நேரத்தோடு வெளிவர அநேகரின் ஒத்துழைப்பு இருந்திருக்கிறது. அவர்களெல்லோருக்கும் என் நன்றிகள்.

இறையியல் பயிற்சி பற்றி நம்மால் சிந்திக்காமல் இருக்க முடியாது. திருச்சபைக்கு போதக சமர்த்துள்ள போதகர்கள் தேவையெனில் அதற்குத் தகுதியுள்ளவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்தத் தகுதியை இன்றைய சூழ்நிலையில் எப்படிப் பெற்றுக்கொள்ளுவது? என்பது பற்றி இந்த இதழில் விளக்க முயன்றிருக்கிறேன். இது உங்களை சிந்திக்க வைக்கவேண்டும்.

 

Continue reading