இந்த வருடத்தின் முதல் இதழ் இது. இதில் விசேஷம் என்னவென்றால் இந்த இதழ் வழமையான இதழைப் போலில்லாமல் வந்திருப்பதுதான். திருமறைத்தீபம் தன்னுடைய இருபது வருட நிறைவை நினைவுகூர்ந்து கர்த்தருக்கு நன்றி தெரிவிப்பதோடு வாசகர்களுக்கு ஊக்கந்தரும் விதத்தில் இந்த இதழை வெளியிட்டிருக்கிறோம். அதற்காக ஆவிக்குரிய செய்திகள் இதில் இல்லை என்பதில்லை. ஜே. சீ. ரைலின் நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல், கிறிஸ்தவனில் பாவம் ஆகிய வேதபோதனைகளுக்கான விளக்கங்கள் இதில் வந்திருக்கின்றன.