திருமறைத்தீப எழுத்துப்பணி மூலம் ஆண்டவர் வழிநடத்திக் கற்றுத்தருகின்ற பாடங்கள் எத்தனையோ. இதழ் வெளியிடுவதென்பது இலகுவான காரியமல்ல. பலருடைய அன்போடுகூடிய வற்புறுத்தல் காரணமாக ஆரம்பிக்கப்பட்டபோதும் அதில் எத்தனையெத்தனை பொறுப்புக்கள், சந்திக்கவேண்டிய சூழ்நிலைகள் என்று முகங்கொடுத்த விஷயங்களுக்கெல்லாம் எல்லை இல்லை. முக்கியமாக இதழை ஒவ்வொரு தடவையும் கவனத்தோடு தயாரித்து, சரிபார்த்து அச்சிடுபவர்களுக்கு நேரத்தோடு அனுப்பிவைப்பதென்பது சாதாரணமான விஷயமல்ல. தொடர்ச்சியாக வருடாவருடம் சளிக்காமல், ஆர்வத்தோடும், ஊக்கத்தோடும், ஆவிக்குரிய சந்தோஷத்தோடும், சரியானபடி இதழின் தரம் எந்தவிதத்திலும் தேய்ந்துவிடாதபடி தயாரிப்பது என்பது இலகுவான செயலா? அனுபவம் பல விஷயங்களை இதில் கற்றுத்தந்திருக்கின்றது.