வருடங்கள் மழைத்துளிபோல விழுந்து உருண்டோடி விடுகின்றன. புதிய வருடமொன்றைக் கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார். அதோடு வரும் பொறுப்புக்களும் ஏராளம். இந்த வருடத்திலும் கர்த்தர் நமக்குதவட்டும். முன்னதாகப் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது தமிழகத்தில் பத்திரிகையின் 20ம் வருட நன்றிகூறும் நினைவுக்கூட்டம் நடந்து முடிந்திருக்கும். கர்த்தர் நல்லவர்; நம்மைத் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார். அவருக்கே சகல மகிமையும்.