எளிமையான முறையில் 1995ம் வருடம் எளிய முயற்சியாக திருமறைத்தீபம் உருவானது. நண்பர்கள் சிலரின் ஊக்குவிப்பினால் பெரும் பணச்செலவில்லாமல் ஆரம்பமான இதழ் பணி இன்றும் சுயநலநோக்கமெதுவுமின்றி வளர்ந்து, விரிந்து, பரந்து உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழ் கிறிஸ்தவர்கள் வாசித்துப் பயனடையும் ஆவிக்குரிய இதழாக இருந்துவருகிறது. இந்த இருபத்தி ஐந்து வருடங்களும் எத்தனை வேகமாக ஓடிவிட்டன. இதழ் பணியில் ஈடுபட்டு வருகின்ற எவருமே இத்தனை வருடங்களுக்கு இதழ் பணி செய்யப்போகிறோம் என்று நினைத்தும் பார்த்ததில்லை.