வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! இந்த இதழ் நாம் வெளியிட்டிருக்கும் நூறாவது இதழ்! இதில் வந்திருக்கும் ஆக்கங்கள் உங்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கும் என்று நம்புகிறேன். முதலாவது ஆக்கம் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனைப்பற்றியது. வாஷிங்டன் மிகச் சிறப்புவாய்ந்த வரலாற்றைத் தன்னில் கொண்டிருக்கும் நகரம். அங்கு போகும் அமெரிக்கர்கள் அதன் வரலாற்றுச் சிறப்பை நினைவுகூரவே அங்கு போவார்கள். ஒரு புனித இடத்தில் கால் பதித்தது போன்ற ஓர் உணர்வை வாஷிங்டன் ஏற்படுத்தும். அந்தளவுக்கு அரும்பெரும் வரலாற்றுப் பெருமைகளை நமக்கு அது நினைவுறுத்துவதாக இருக்கிறது. இரண்டு நாட்கள் அந்த நகரில் தங்கி அதன் வரலாற்று சிறப்புமிகுந்த பகுதிகளை நான் போய்ப்பார்த்தேன். அதன் வரலாற்றுப் பெருமையில் திளைத்து வியந்து நின்றேன். இன்னுமொரு முக்கிய விஷயம் அந்த வரலாற்றில் அமெரிக்காவின் கிறிஸ்தவ வரலாறும் இணைபிரியாமல் பதிந்து காணப்படுகிறது. கிறிஸ்தவர்களைத் தலைவர்களாகக் கொண்டு பிறந்தது தானே அமெரிக்கா. ஆக்கத்தை வாசித்து அந்நகரின் சிறப்பை உணர்ந்து நம்மாண்டவரைத் துதியுங்கள்.

Continue reading