கர்த்தரின் வேதத்தைப் பற்றிய மிக விளக்கமான நீண்டதொரு ஆக்கத்தைக் கடந்த இதழில் தந்திருந்தேன். வேதத்தின் மெய்த்தன்மை, அதனுடைய குணாதிசயங்கள் பற்றிய உண்மைகளை அறியாமலேயே வேதத்தைப் பயன்படுத்தி வருகிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு ஆதாரமாக இருந்து, இரட்சிப்புக்கான சுவிசேஷத்தைத் தன்னுள் அடக்கிக் காணப்படும் வேதத்தைப் பற்றிய சத்தியங்களை அறிந்துகொள்ளாமல் அதனால் எப்படிப் பயன்பட முடியும்?