திருச்சபைக் கோட்பாடுகள் வேதத்தில் கர்த்தர் தந்திருக்கும் அதிமுக்கியமான அடிப்படைப் போதனைகளில் ஒன்று. அநேகர் அதுபற்றிக் கர்த்தர் வேதத்தில் விளக்கமாக எதையும் நமக்குத் தரவில்லை என்று எண்ணி வருகிறார்கள். அதற்குக் காரணம் அப்போதனைகளை எவ்வாறு வேதத்தில் இருந்து பெற்றுக்கொள்வது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. கர்த்தர் இந்த உலகத்தில் சபையைக் கட்டியெழுப்புவதற்காகத் தன்னுடைய ஒரே மகனை அனுப்பியிருக்கும்போது, அது பற்றி வேதத்தில் விளக்காமலா இருந்துவிடப் போகிறார்? எந்தளவுக்குத் திருச்சபை முக்கியமானது, அவசியமானது, மகிமையானது என்பதை இந்த ஆக்கத்தில் விளக்கப்போகிறேன்.