1689 விசுவாச அறிக்கை – வாசகர் மதிப்பீடு

1689 விசுவாச அறிக்கை நூலுடனான என் பயணம் அதன் கடைசி இரண்டு அதிகாரங்களில் இருந்துதான் ஆரம்பமானது. பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் நண்பர்களாக சேர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது, நியாயத்தீர்ப்புக்குப் பின்னர் அவிசுவாசிகளின் ஆத்துமாவுக்கு என்ன ஆகும்? என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுந்தது. ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்தார்கள். சீர்திருத்த போதனைகளின் ஆதிக்கம் எனக்குள் தலைதூக்கியிருந்த அந்த ஆரம்ப நாட்களில், கேட்பதை எல்லாம் அப்படியே நம்பி விடும் குணம் மாறி, காரணகாரியங்களோடு வேதத்தின் அடிப்படையில் அவற்றை சிந்தித்துப் பார்க்கும் எண்ணம் வேரூன்றியிருந்தது. எனவே இந்தக் கேள்விக்கான சரியான பதிலைத் தேடி, இறுதியில் 1689 விசுவாச அறிக்கையின் கடைசி அதிகாரத்தில் அதனைக் கண்டுகொண்டேன்.

Continue reading