ஆசிரியர் மடல்

கண்கள் திறக்க. . .!

அன்புள்ள வாசகர்களுக்கு,

கிறிஸ்துவின் நாமத்தில் என் நல்வாழ்த்துக்கள். கர்த்தருடைய கிருபையின் உதவியால் நாம் ஆரம்பித்துள்ள இச்சிறிய முயற்சிக்குக் கிடைத்து வரும் ஆதரவிற்குத் தலை வணங்குகிறோம். உங்களுடைய அன்பான ஆதரவும், கருத்துக்களும் இவ்வூழியத்திற்குப் பேருதவியாக அமையும், பலவிதமான சபை ஊழியங்களுக்கு மத்தியில் இப்பத்திரிகைக்கும் நேரம் ஒதுக்க அனுமதித்து, ஆதரவளித்து ஜெபத்தோடு என்னை ஊக்குவித்து வரும் என் சபை மக்களுக்கு என் நன்றி என்றும் உரித்தாகும். அவர்களுடைய உதவியில்லாமல் இதை நான் ஆரம்பித்திருக்கவே முடியாது. முதலாவது இதழுக்குக் கிடைத்துள்ள ஆதரவு எமக்கு அதிக ஊக்கத்தை அளிக்கிறது. சந்தா எதுவும் இல்லாமல், பலரும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை வெளியிடுகிறோம். ஆகவே, இதைப் பெறும் வாசகர்கள் மற்றவர்களுக்கு இதனை அறிமுகப்படுத்தி இவ்வூழியத்தில் பங்கு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

Continue reading