இக்காலத்தில் ஐக்கியத்தைப்பற்றி பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சபைகள் கூடிவருவதற்குத் தடையாக இருக்கும் சுவர்களனைத்தையும் இடிக்கவேண்டும். சமயக் கிளைகளனைத்தையும் ஒன்று சேர்க்கவேண்டும் என்றும் பேசிவருகிறார்கள். ஐக்கியத்தைக்குறித்து நாம் இந்தவிதத்தில் சிந்திக்கக்கூடாது. நம்மால் விரும்பப்படுவதும் அல்லது இயலக் கூடியதுமான ஒரே ஐக்கியம். இயேசு கிறிஸ்துவின் பாதத்தினடியில் நாமனைவரும் ஒன்று கூடிவருவதுதான். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கு எதிரானவைகளையும் நம்மத்தியில் நாம் அனுமதித்தால் அது இயற்கைக்கே விரோதமானதாகும். அத்தோடு, அது கிறிஸ்துவுக்கு எதிரான நம்பிக்கைத் துரோகமுமாகும்.