“வாசிப்பு மனிதனை முழுமையானவனாக்குகின்றது”
– பிரான்ஸிஸ் பேக்கன் –
‘கற்றனைத்து ஊறும் அறிவு’ என்பது தமிழ்ப்புலவன் வள்ளுவன் வாக்கு. எந்தளவுக்கு நாம் படிக்கிறோமோ அந்தளவுக்கு அறிவு வளர்ச்சியும், முதிர்ச்சியும் அடைவோம் என்பது இதன் பொருள். வேதத்தில் நல்லறிவு பெறுவதற்கு நாம் வாசிக்கும் பயிற்சியை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேதத்தை அன்றாடம் ஊக்கத்தோடு வாசித்தல் அவசியம். அதே வேளை வேதசத்தியங்களைப் போதிக்கும் நல்ல நூல்களையும் நாம் வாசிக்க வேண்டும்.