ஒருவர் சிந்திப்பதற்கு வாசிப்பு அவசியம். சிந்திக்கும் அனைவருக்குமே வாசிக்கும் பழக்கம் இருக்கவேண்டும். அதிலும் வேதத்தை அன்றாடம் எடுத்து விளக்கும் ஊழியத்தில் ஈடுபட்டுள்ள போதகர்களுக்கு வாசிக்கும் பயிற்சி அதிகமுக்கியம். வாசிப்பு போதனைகளை சிந்திக்க வைக்கிறது. வேதத்தை வாசிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவ்வேதத்தைப் புரிந்து கொள்ளத்துணை புரியும் நூல்களை வாசிப்பதும் அவசியம். போதக ஊழியத்தில் ஈடுபட்டுள்ள அநேகர் தமது வேலைப்பளுவினால் வாசிப்பதையே முற்றாகத் தவிர்த்துவிடுகிறார்கள். சிலர் வேதத்தை மட்டும் வாசித்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்ற எண்ணத்தையும் கொண்டுள்ளார்கள். சிறையிலிருந்த பவுல் தீமோத்தேயுவிடம் நீ வரும்போது புத்தகங்ளைக் கொண்டுவா (1 தீதோ. 4:13) என்று கூறுவதைப் பார்க்கிறோம்.