வாசிப்பது எவ்வளவு அவசியமோ அந்தளவுக்கு எதை வாசிப்பது? எப்படி வாசிப்பது? என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். வாசிப்பதற்கு துணை புரியும் சில அறிவுரைகளைப் பார்ப்போம்.
1. நமது விசுவாசத்திற்கு துணைபுரியும் நல்ல நூல்களையே வாசிக்க வேண்டும். இரண்டாந்தரமான நூல்களை நாம் கண்ணெடுத்தும் பார்க்கக்கூடாது. இன்று புத்தகக்கடைகளில் காணப்படும் தொண்ணுற்றி ஐந்து வீதமான நூல்கள் நமது விசுவாச வளர்ச்சிக்குத் துணை செய்யா. போல் யொங்கி சோ, சாம் ஜெபத்துரை, ஓரல் ரொபட்ஸ், சாது செல்லப்பா போன்றோருடைய நூல்களால் எந்தப்பயனும் அடைய முடியாது. தம்மை வளர்த்துக் கொள்ளவும், ‘விபரல்’ கொள்கைகளைப் பரப்பவுமே நூல்கள் எழுதும் இத்தகையோரால் நமது விசுவாச வாழ்க்கைக்குத் தீங்கு ஏற்படும்.