கடந்த இதழில் திருமறைக்கு முரணானவகையில் வேத விளக்கமளித்து கர்த்தரின் கிருபையையே எள்ளி நகையாடும் ஆமீனியனின் போதனைகளையும் அவற்றிற்கு எவ்வாறு ஒல்லாந்து தேசீய சமயக்குழு முடிவு கட்டியது என்றும் பார்த்தோம். இருந்தாலும் காலத்தால் அழியாத சத்தியங்களைப் போலவே சில வேளைகளில் பொய்யும் தலை தூக்குவதுபோல் ஆமீனியனின் போதனைகள் இன்றும் பலரைப் பல நாடுகளிலும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கின்றது.