சிரிக்கக்கூடிய காரியமா?

‘டொரான்டோ ஆசீர்வாதம்’ பற்றிய ஒரு கண்ணோட்டம்

சிரிக்க வைக்கும் சிரிப்பலை மாயம் பற்றிய செய்தியை இப்பத்திரிகை மூலமாக முன்பே தந்திருந்தோம். கனடாவின் டொரான்டோ நகரில் உள்ள ‘ஏர்போர்ட் வினியட் சபை’யின் மூலம் 1994 ஆம் ஆண்டில் இம்மாயம் முதன் முதலாக தலைப்புச் செய்தியில் இடம் பிடித்தது. பெந்தகொஸ்தே, பரவசக்குழுக்கள் மத்தியிலேயே பிரசித்தி பெற்று ‘டொரொன்டோ ஆசீர்வாதம்’ என்று பெயர் பெற்றுள்ள இதனைச் சிலர் ஆவியின் எழுப்புதல் என்று கூறினாலும் ஆண்டவரை இதுவரை அறியாத யாருமே அவரை இதன் மூலம் அறிந்து கொண்டதாக செய்தியில்லை. இதன் இன்றைய முக்கிய தலைவர்களில் ஒருவரான ரொட்னி-ஹாவார்ட் பிரவுன் இதனை எதிர்ப்பவர்கள் கண்கள் குருடாகி பேசமுடியாமல் போவார்கள் என்று பயமுறுத்தி வருகிறார். டொரான்டோவின் ‘ஏர்போட் வினியட் சபை’யில் ஆரம்பிக்கு முன்பாகவே இம்மாயம் பெனி ஹின், ரொட்னி ஹாவார்ட் பிரவுன், கென்னத் கோப்லான்ட் ஆகிய மனிதர்களால் நடத்தப்பட்டு வந்தது. மொரிஸ் செரூல்லோ, போல் யொங்கி சோ ஆகியோரும் இதைக் குறித்து நூல்கள் எழுதியுள்ளனர்.

Continue reading