கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 25: கிறிஸ்து எவ்வாறு தீர்க்கதரிசியாகிய பணியைச் செய்கிறார்?

பதில்: கிறிஸ்து எமது இரட்சிப்பிற்கான தேவசித்தத்தைத் தனது வார்த்தையாலும், ஆவியாலும் வெளிப்படுத்துவதன் மூலம் தீர்க்கதரிசியாகிய பணியைச் செய்கிறார்.

(யோவான் 1:18; யோவான் 20:31; யோவான் 14:26)

விளக்கக்குறிப்பு:

பவுல் எபேசியர் 2:20 இல் திருச்சபையானது ‘அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டு அதற்குக் கிறிஸ்துவே மூலைக்கல்லாயிருக்கிறார்’ என்று கூறுவதைப்பார்கிறோம். ஏனைய அடிக்கற்கள் மூலைக்கல்லைச் சார்ந்திருப்பதைப் போல், அப்போஸ்தலரும் தீர்க்கதரிசிகளும் இயேசு கிறிஸ்துவை சார்ந்திருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் கடவுளின் வசனத்தை எடுத்துக் கூறும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னவையும், எழுதியவையும் கடவுளின் வார்த்தைகளேயன்றி வேறில்லை. அவர்கள் தங்களது சுயவல்லமையின் மூலம் பேசாமல் ஆவியின் வல்லமையினால் பேசினார்கள் (1 பேதுரு 1:1).

Continue reading