வாசகர்கள் எமக்கு அனுப்பும் கேள்விகளில் தெரிவு செய்யப்பட்டவை ஏனையோரின் பயன்கருதி இப்பகுதியில் பிரசுரமாகும். – ஆசிரியர்
இசைவழி ஊழியங்களும் அருளுரையும் ? !
இசைவழி ஊழியங்கள் பற்றிய தங்கள் கருத்தென்ன? தமிழ்க் கலாச்சாரத்துடன் ஆழ்ந்த தொடர்புடைய இசை நிகழ்ச்சியான ‘வில்லுப்பாட்டு’ போன்றவற்றின் மூலம் கர்த்தரின் செய்தியை எடுத்துச் சொல்வது தவறா?
கேள்வி சுருக்கமாக அமைந்துவிட்டபோதும் இதற்கான பதில் சுருக்கமாக அமைவது கடினம். இன்று பலர் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இசைவழி ஊழியங்கள் மூலம் கர்த்தரைப்பற்றி எடுத்துச் சொல்லி வருகிறார்கள். பலர் தங்கள் தாலந்துகளைப் பயன்படுத்தி இவ்வூழியத்தின் மூலம் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் வேளையில், பல சிரமங்களுக்கு மத்தியில் இவ்வூழியத்தைச் செய்து வருபவர்களும் உண்டு. ஆனாலும் இவ்வகை ஊழியங்களை எவ்வாறு நியாயப்படுத்த முடியும், இவற்றிற்கு வேதம் அனுமதி கொடுக்கிறதா? என்று நாம் ஆராய வேண்டியது அவசியம்.