வேதவசனங்கள் சாதாரணமாக என்ன பொருளைக் கொண்டுள்ளனவோ அதன்படியே விளக்கப்பட வேண்டுமே தவிர அவற்றை உருவகப்படுத்தக் (Allegory) கூடாது.
1. வலுக்கட்டாயமாக நியாயமற்ற வகையில் வசனத்தை உருவகப்படுத்தலாகாது. இது பொது அறிவுக்கே முரணான பாவமாகும். சில போதகர்கள் இவ்விதத்தில் வேத வசனங்களை மோசமாக திருமறைக்கு முரணான விதத்தில் பயன்படுத்தி அவை கூறாத பொருளைக் கூறி விளக்கி வருகின்றனர். ஞானிகளுக்கு மத்தியில் முட்டாளாகவும், முட்டாள்களுக்கு மத்தியில் ஞானியாகவும் நம்மை மாற்றக்கூடிய இத்தகைய சிறுபிள்ளைத்தனமான மோசமான உருவகப்படுத்தலைக் கைவிட வேண்டும்.