கடந்த இதழில் ஆர்மீனியக் கோட்பாடுகளுக்கு பதிலுரையாக டோர்ட் சமயப் பேரவையினால் கொண்டுவரப்பட்ட ஐங்கோட்பாட்டினை சுருக்கமாகப் பார்த்தோம். கிருபையின் போதனைகளை உள்ளடக்கி எழுந்ததே இவ்வைங்கோட்பாடு. ஆகவே, இதனைக் கிருபையின் போதனைகள் என்றும் அழைப்பது வழக்கம். கிருபையின் போதனைகளை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இப்பகுதி இவ்வைங்கோட்பாடுகளைப் பின்பு விளக்கமாக ஆராயவிருக்கிறது. அதற்கு முன்பாக நடைமுறையில் இருக்கும் சில தப்பபிப்பிராயங்களை நாம் தீர்த்துக் கொள்வது நல்லது.