கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 26: கிறிஸ்து எவ்வாறு ஆசாரியராகிய பணியினைச் செய்கிறார்?

பதில்: கிறிஸ்து தேவநீதியைச் சமாதானப்படுத்தும் பலியாகத் தன்னை ஒப்புக் கொடுப்பதன் மூலமும், கடவுளோடு நம்மை ஒப்புரவாக்குதலின் மூலமும், நமக்காகத் தொடர்ந்து மன்றாடுதலின் மூலமும் ஆசாரியராகிய பணியினைச் செய்கிறார்.

(எபிரேயர் 9:28; 2:17; 7:25)

விளக்கக்குறிப்பு:

இவ்வினாவிடை மூலம் நாம் பலராலும் தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டுள்ள திருமறை போதிக்கும் சீர்திருத்தக் கோட்பாடான ‘வரையறுக்கப்பட்ட (Limited) என்ற வார்த்தை பலருக்கு ஏற்புடையதாக இல்லாமிருக்கின்றது. இருந்தாலும் இவ்வார்த்தை வேதத்தின் முக்கிய போதனைகளில் ஒன்றான, கிறிஸ்து பரிகாரப் பலியாக எல்லா மனிதர்களுக்காகவும் அல்லாமல் சிலருக்காகவே மரித்தார் என்பதைக் குறிப்பிடுகின்றது. இதை விளக்க வேறொரு வார்த்தையான ‘குறிக்கப்பட்டவர்களுக்கான’ (Particular) என்ற பதமும் பயன்படுத்தப்படுகின்றது.

Continue reading