வாசகர்கள் எமக்கு அனுப்பும் கேள்விகளில் தெரிவு செய்யப்பட்டவை ஏனையோரின் பயன்கருதி இப்பகுதியில் பிசுரமாகும் – ஆசிரியர்
திருமறையும் தமிழ்க் கலாச்சாரமும்!
ஒருவர் கிறிஸ்தவராக மாறியபின் எந்தளவுக்கு தமது கலாச்சாரத்தைத் தொடர்ந்து பின்பற்ற முடியும்?
முதலில் கலாச்சாரம் என்றால் என்ன என்று சிந்திக்க வேண்டும். கலாச்சாரம் என்பது ஒரு இனத்தின் வாழ்க்கைமுறை அல்லது பண்பாடு. கலாச்சாரம் இல்லாத இனமே இல்லை. சமுதாயத்தோடு ஊறிப்போயிருப்பது கலாச்சாரம். ஒருவிதத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒளியூட்டுவது அதன் கலாச்சாரம் என்று கூறலாம். ஆகவே எந்த இனத்திலிருந்தும் அதன் கலாச்சாரத்தைப் பிரிக்க முடியாது. ஓரினத்தின் கலாச்சாரத்தை அழிப்பதன் மூலம் அந்த இனத்தையே அழித்துவிடலாம். எனவே கலாச்சாரம் என்பது தீமையானதல்ல.