விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தினால் அவர்களது உள்ளான ஆவிக்குரிய வாழ்வு பெலவீனப்படும் என்று இவ்வத்தியாயத்தில் கற்றுக் கொள்கிறோம். அவர் என்ன சொல்லுகிறார் என்பதில் அக்கறை கொள்ளாததினாலும், மற்றும் தங்களது வாழ்க்கையில் அவரது கிரியைகளைப் புறக்கணிப்பதின் மூலமும் ஆவியானவரைத் துக்கப்படுத்த முடியும்.
கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை மகிமைப்படுத்த வேண்டும். அவரையல்லாமல் மனந்திரும்புதலைக் குறித்தோ, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தோ, வேதத்தைப் புரிந்து கொள்வதைக் குறித்தோ, ஜெபிப்பதைக் குறித்தோ, கடவுளுக்குப் பிரியமாக வாழ்வதைக் குறித்தோ கிறிஸ்தவர்கள் ஒன்றுமே தெரிந்து கொள்ள முடியாது.