கிருபையின் மாட்சி
எழுதியவர்: ஆபிரகாம் பூத்
தமிழாக்கம்: வேதவள்ளி மெசாயாடொஸ்
இந்நூலை இவ்விதழில் அறிமுகப்படுத்துவது ஒருவிதத்தில் மிகப் பொருத்தமானது. ஏனெனில் இவ்விதழில் தேவ கிருபையின் மகிமையைப் பற்றிய மேலும் பல நல்ஆக்கங்களை வாசகர்கள் பார்க்கலாம். ஆபிரகாம் பூத் கூறுவதுபோல், சீர்திருத்த சபைகளுக்கும் ரோமன் கத்தோலிக்க சபைகளுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் கிருபையின் போதனைகளைப் பற்றியதே. சீர்திருத்த சபைகள் கிருபையின் மூலம் மட்டுமே ஒருவன் இரட்சிப்பை அடையலாம் என்று போதிக்க கத்தோலிக்க சபை கிரியைகளின் மூலம் அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று வாதிடுகின்றது. இது இன்று கத்தோலிக்க சபைகள் மட்டும் வாதிடும் வாதமாக இல்லாமல் சுவிசேஷக் கோட்பாட்டாளர் மத்தியிலும் வேறு விதங்களில் காட்சியளிப்பதை வாசகர்கள் அறிவார்கள். ஆர்மீனியனிசக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பவர்களும் இதே போக்கையே பின்பற்றுகின்றனர். சுவிசேஷத்தைக் கேட்பவர்களைக் கரம் தூக்க வைத்து கடவுளிடம் கொண்டுவர முயலும் அனைவரும் தேவ கிருபையின் மாட்சியைப் புரிந்து கொள்ளாதவர்களே. தேவ கிருபைக்கு மதிப்பளிப்பவர்கள் மனித சக்தியை நம்பிக் காரியமாற்ற முயல மாட்டார்கள்.