தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு

வரலாற்றுபூர்வமான கிறிஸ்தவம் போதிக்கும் மறுபிறப்பிற்கு முரணாகப் போர்க்கொடி தூக்கியுள்ள “தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு” என்ற போதனை பற்றிய விளக்கக்கட்டுரை இது.

தீர்மானத்தின் மூலம் மறுபிறப்பு – ஜேம்ஸ் அடம்ஸ்

அறிமுகம்

மறுபிறப்பு என்றால் என்ன?

ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தைக் காண மாட்டான் (யோவான் 3:3). இயேசு கிறிஸ்து, மறுபிறப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் பொருட்டு ஒருவருமே மறுபிறப்படையாமல் பரலோகத்தை அடைய முடியாது என்று கூறுகிறார். இப்போதனையை சரிவரப்புரிந்து கொள்ளாததால் ஏற்படும் தவறுகளால் கிறிஸ்தவ சபைக்கு பெரும் ஆபத்துக்கள் நேரிட்டுள்ளன. கர்த்தருடைய செயலினால் மட்டுமே ஒருவர் மறுபிறப்படைய முடியும். இது மனிதனால் ஆகக்கூடியதல்ல. மறுபிறப்பென்பது கர்த்தர் நம்மில் ஏற்படுத்தும் ஒரு மாற்றமேயல்லாது நமக்குள் நாமே செய்து கொள்ளும் ஒரு காரியமல்ல. அப்போஸ்தலனான யோவான் தனது நற்செய்தி நூலின் முதலாவது அதிகாரத்தில் இதனை மிக அழகாகப் பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றார்.

Continue reading