வியாக்கியானப் பிரசங்கம்

இன்று அநேக சபைகளில் பிரசங்கத்திற்கு மதிப்பில்லை என்பது வாசகர்கள் அறிந்த உண்மை. எதன் மூலம் கர்த்தர் தனது மக்களைத் தம்மிடம் அழைத்துக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறாரோ அந்தச் சாதனமான பிரசங்கத்தை விடுத்து வேறு காரியங்களில் நேரத்தைச் செலவிடும் பிரசங்கிகள் அநேகம். கெரிஸ்மெட்டிக் கூட்டம் இன்று பிரசங்கத்தை உதாசீனம் செய்து அற்புதங்களை நாடி ஓடி அழிந்து கொண்டிருக்கின்றது. பெனி ஹின், ரொட்னி ஹாவார்ட் பிரவுன் போன்ற போலி ஆசாமிகள் மேடைகளில் நாடகமாடி மக்களைக் கவர்ந்து பணம் பறிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது மேடைகளில் வேதமோ, நற்செய்தியோ பிரசங்கிக்கப்படுவதேயில்லை. எதைச் செய்யாவிட்டாலும் இவர்கள் பணம் கேட்பதில் தவறுவதில்லை.

Continue reading